×

அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக 800 மில்லிகிராம் வெள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகைதொழிலாளி

நாகர்கோவில், மார்ச் 22:  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி அனைவரும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் சுசீந்திரம் தாணுமாலையன்நகரை சேர்ந்த நகை தொழிலாளி பாலமுருகன் என்பவர், அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 800 மில்லிகிராம் வெள்ளியில், நான் வாக்களித்து விட்டேன் என மை வைக்கப்பட்ட விரலை காண்பிப்பது போன்று செய்துள்ளார். இது குறித்து பாலமுருகன் கூறியதாவது: மீனாட்சிபுரத்தில் நகை பட்டறை நடத்தி வருகிறேன். பல்வேறு காலகட்டத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சிறிய அளவில் தங்கத்தில் பல பொருட்கள் செய்துள்ளேன். தற்போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வாக்களித்து விட்டு, கையில் மையை காண்பிப்பது போல் 800 மில்லிகிராம் வெள்ளியில் செய்துள்ளேன் என்றார்.

Tags : jewelry maker ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு