×

லாரி மோதி

மாணவர் பலிகாரிமங்கலம், மார்ச் 22: காரிமங்கலம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிரதீப்குமார் (15). அதே பகுதியில் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காரிமங்கலம் சர்வீஸ் சாலையில் பிரதீப்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி பிரதீப்குமார் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பிரதீப்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பலியான மாணவரின் சடலத்தை கைப்பற்றி காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Larry ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி