×

விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கந்தர்வகோட்டை, மார்ச் 22: காலியாக உள்ள இடங்களுக்கு விஏஓ நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கந்தர்வகோட்டையில் 32 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் 13 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். ஒரே விஏஓ இரண்டு மூன்று கிராமங்களை கவனித்து வந்தனர். இதனால் வேலை சுமை கூடுதலாக இருந்தன. இந்நிலையில் கூடுதலாக 15 கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்தியுள்ளனர். இருப்பினும் துவார், ஆத்தரைங்விடுதி, அண்டனூர் மற்றும் கோவிலூருக்கு விஏஓ இல்லாத நிலை உள்ளது. தேர்தல் சமயத்தில் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : workplaces ,
× RELATED அனைத்து பாடத்துக்கும் பட்டதாரி...