ஜெயங்கொண்டம், மார்ச் 22: ஜெயங்கொண்டத்தில் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் உடையார்பாளையம் கோட்டாட்சியருமான ஜோதி தலைமை வகித்தார் ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் சம்பந்தமான பயிற்சி மற்றும் அறிவுரை வழங்கப்பட்டன தேர்தல் துணை தாசில்தார்கள் ஆண்டிமடம் சுசிலா, ஜெயங்கொண்டம் செல்வகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆண்டிமடம் கோவிந்தராஜ் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் பங்கேற்றனர்.