×

திருமலைராயன்பட்டினத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சாராய மூட்டைகள், 2 பைக் பறிமுதல்

காரைக்கால், மார்ச் 22:  காரைக்கால் திருமலைராயன்பட்டினம் போலீசார்  நடத்திய வாகன சோதனையில், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சாராய மூட்டைகள் மற்றும் 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காரைக்கால் மாவட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருமலைராயன்பட்டினம், காவல் நிலைய எஸ்.ஐ பெருமாள் மற்றும் போலீசார், கீழவாஞ்சூர் எல்லையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக வந்த 4 பைக்குகளை நிறுத்தினர். அப்போது, போலீசாரை பார்த்ததும்,  பைக்குகளில் வந்த 4 பேர், 4 சாராய மூட்டைகளை 2 பைக்குகளோடு சாலையில் வீசியெறிந்துவிட்டு, 2 பைக்குகளில் தப்பியோடி விட்டனர். தொடர்ந்து, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 180 லி சாராய மூட்டைகள், 2 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், அனைத்தையும் மாவட்ட கலால்துறை வசம் ஒப்படைத்தனர். தப்பியோடிய வாலிபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Trincomalee ,
× RELATED நேற்றும் திருச்செந்தூரில் 23செ.மீ, காயல்பட்டினத்தில் 21செ.மீ. கனமழை பதிவு..!!