கரூர், மார்ச் 22: கரூர் ஒன்றியம் கோயம்பள்ளியில் குளம் உள்ளது. அவ்வப்போது பெய்யும் மழைநீர் தேங்கும் நிலையில் இருந்தது. ஆனால் பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் குளத்தை சுற்றிலும் முட்கள் வளர்ந்து காணப்படுகிறது. கோடை காலத்தை பயன்படுத்தி முட்புதர்களை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும். பருவமழை பெய்யும்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற வகையில் நீரை சேமிக்க நடவடிக்கையாக அது அமையும் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.