×

காணை நோய் தடுப்பூசி முகாம்

காளையார்கோவில், மார்ச் 21: காளையார்கோவில் அருகில் மரக்காத்தூர் கால்நடை மருந்தகம் சார்பில் சுற்றியுள்ள கிராமங்களில் காணை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.காளையார்கோவில் அருகில் மரக்காத்தூர் கால்நடை மருந்தகம் சார்பில் சிவந்தரேந்தல், குருமனேந்தல், அந்தரேந்தல், மாராத்தூர், நற்கனி, வேம்பணி, அம்மாபட்டிணம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு கோடைகாலங்களிலும் மழைக்காலங்களிலும் வரக்கூடிய வாய்காணை, கால்காணை (கோமாரி) போன்றவை வராமல் தடுப்பதற்கு 3 மாதம் கன்றுகளில் இருந்து அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மரக்காத்தூர் கால்நடை உதவி மருத்துவர் கணேஷ்குமார், கால்நடை ஆய்வாளர்கருப்பையா, ஆகியோர் சிகிச்சை அளித்தார்கள். அப்பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Tags : Vaccination camp ,
× RELATED முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்