சிவகங்கை, மார்ச் 21: சிவகங்கை மக்களவை தொகுதி மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்றும் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. தமிழகம் முழுவதும் ஏப்.18ல் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19ல் தொடங்கி மார்ச் 26 வரை நடக்க உள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதி மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.