ஒரத்தநாடு, மார்ச் 21: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 14ம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து சுவாதியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் அன்பரசனும், கயல்விழியும் காதலித்து வந்ததும், இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டதும் ெதரியவந்தது. இதையடுத்து கயல்விழி, அன்பரசனை போலீசார் தேடி வருகின்றனர்.