×

சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி

திருவள்ளூர், மார்ச் 21: திருவள்ளூர் அருகே இரு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த மிட்னமல்லி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(32). இவர். நேற்று முன்தினம் அயத்தூர் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் பைக்கில் காக்களூர் கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கிளாம்பாக்கம் அருகே வரும்போது, எதிரே வேகமாக சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மற்றொரு சம்பவம்: திருவாரூர் மாவட்டம் மேலப்பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் விக்னேஷ்(24). இவர், வேப்பம்பட்டில் உள்ள பாஸ்ட் புட் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பைக்கில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாநகர அரசு பஸ், எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : road accident ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு