×

பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை அணுகலாம் எஸ்பி தகவல்

அரியலூர்,மார்ச் 21: நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் - 2019-ல்  பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களையும், ஓய்வு பெற்ற காவலர்களையும் அதிக அளவில் ஈடுபடுத்த அரியலூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டையுடன் அரியலூர் மாவட்ட காவல் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை உடனடியாக நேரில் அணுகவும், மேலும் விவரங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண். 04329 - 222216 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என அரியலூர்  எஸ்பி  ஸ்ரீனிவாசன்   தெரிவித்துள்ளார்.



Tags : Ex-servicemen ,
× RELATED இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8...