×

கோபியில் திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்

கோபி, மார்ச் 21:   திருப்பூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். இதைமுன்னிட்டு கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று  நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து வேட்பாளர் சுப்பராயன் பேசியதாவது, ‘‘ரபேல் விமான விவகாரத்தில் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என மோடி கூறினார்.  ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தான் உள்ளது.தமிழகத்தின் உரிமையை பறித்து விட்ட மோடியையும், அவருக்கு தோள் கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசையும் தண்டிக்க வேண்டும்’’ இவ்வாறு சுப்பராயன் பேசினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் நாராயணசாமி, குமாரசாமி, ரமேஷ், சுரேஷ்குமார், மொடச்சூர் செந்தில், கொ.ம.தே.கட்சி மாவட்ட செயலாளர் சிவராஜ், விசிக.,மாவட்ட செயலாளர் அம்பேத்கார், கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் பரமேஷ்வரன், மதிமுக நிர்வாகி சாமிநாதன், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,alliance ,meeting ,Kopi ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி