×

கெங்கவல்லி அருகே மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளை

கெங்கவல்லி, மார்ச் 21: கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஊராட்சியை சேர்ந்தவர் நாராயணன்(60). இவர் சாத்தப்பாடி பஸ் ஸ்டாப்பில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை, கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கெங்கவல்லி போலீஸ் ஸ்ேடஷனில் நாராயணன் புகார் கொடுத்தார். சம்பவ இடம் வந்த போலீசார் கடையில் விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ₹10 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : grocery shop ,Kangavalli ,
× RELATED கெங்கவல்லி அருகே விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சரண்