×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் இருசக்கர வாகன பேரணி

வேப்பனஹள்ளி, மார்ச் 21: வேப்பனஹள்ளியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வருவாய்த்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பணம் வாங்காமல் வாக்களிக்க வலியுறுத்தியும், வருவாய்த்துறை சார்பில், வேப்பனஹள்ளியில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது. இப்பேரணிக்கு, ஆர்ஐ கோகுலகண்ணன் தலைமை வகித்தார். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : revenue bicycle rally ,
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்