×

மாநிலத்தில் திமுக, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வர தவறாது வாக்களிக்க வேண்டும் காங்கிரஸ் ஊடகப்பிரிவு வலியுறுத்தல்

கூத்தாநல்லூர்,மார்ச்21: மாநிலத்தில் திமுக, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வருவதற்கு சிறுபான்மையின மக்கள் தவறாது வாக்களிக்க  வேண்டும் என காங்கிரஸ் ஊடகப்பிரிவு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தியதேசியகாங்கிரஸ் கட்சியின் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி சிறுபான்மை சமூகஊடகப்பிரிவின் பொதுக்குழுகூட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கூத்தாநல்லூரில் உள்ளஇஸ்லாமிய , கிறிஸ்தவஅமைப்புக்களைஉள்ளடக்கிய சிறுபான்மைசமூகமக்கள்அனைவரும் பாசிசபாரதிய ஜனதாகட்சிக்கும், மக்கள்விரோத தமிழக அதிமுக. கட்சிக்கும் எதிராக வாக்களித்து, மாநிலத்தில்திமுக. தலைமையிலானஆட்சியைiயும், மத்தியில்காங்கிரஸ் தலைமையிலானஆட்சியையும் கொண்டு வர பாடுபட வேண்டும்.

மேலும் இஸ்லாமிய கிறிஸ்தவமக்கள்அனைவரும் வாக்களித்து நூறுதவீதவாக்குப்பதிவைஉறுதிசெய்யகூத்தாநல்லூர் இந்தியதேசியகாங்கிரஸ் சிறுபான்மை சமூகஊடகப்பிரிவுபிரசாரம் மேற்கொள்வதுடன், சிறுபான்மையின மக்கள்அனைவரும் தவறாது வாக்குச்சாவடிக்குசென்றுதங்களது ஜனநாயககடமையை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுகூட்டத்திற்குகாங்கிரஸ் திருவாரூர் சட்டமன்றதொகுதிசமூகஊடகப்பிரிவுஅமைப்பாளர் சமீர் தலைமை வகித்தார். சமூகஊடகப்பிரிவுதலைவர் ரஹ்மத்துல்லாமுன்னிலை வகித்தார்.

Tags : DMK ,state ,Congress ,regime ,
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...