×

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி, மார்ச் 21: தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போல்டன்புரம் பகுதியில் உள்ள கக்கன்ஜி பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் போல்டன்புரத்தை சேர்ந்த  ராஜாமணி (25) என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், ராஜாமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக மோசடி...