×

குலசேகரன்பட்டினத்தில் மரம் விழுந்து வீடு சேதம்

உடன்குடி, மார்ச் 21: குலசேகரன்பட்டினம் கொத்துவாப்பள்ளி தெரு பகுதி மெயின் ரோட்டில் பழமையான வேப்பமரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் காலை திடீரென ஒரு மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததில் சாலையோரத்தில் உள்ள நிரோஷா என்பரது ஓட்டு வீடு சேதமடைந்தது. ஓடுகள் உடைந்து விழுந்ததில் வீட்டினுள் இருந்த நிரோஷா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மரங்கள் சேதமடைந்திருப்பது குறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதமடைந்த வீட்டிற்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,dam ,Kulasekarapattinam ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...