×

திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த மகள் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

திருவண்ணாமலை, மார்ச் 21: திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள அருவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(35). இவரது மனைவி செல்வி(34). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை இறந்து விட்டார். செல்வி தனது தாயார் வீ‘ட்டில் வசித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் காலை வெளியில் சென்ற செல்வி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அக்கம், பக்கம் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அவர் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லலூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தானிப்பாடி போலீசில் செல்வின் தாய் சின்னப்பொண்ணு புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : farm land ,Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...