×

மீன்பிடி தொழிலாளி தற்கொலை

குளச்சல்: குளச்சல்  அருகே மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் குருசு அந்தோணி (72).  மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியும் இறந்து விட்டார். இதனால் கடும் மன  அழுத்தத்தில் இருந்து வந்தார்.  குருசு அந்தோணி உறவினர் சகாயமேரி  வீட்டில் வசித்து வந்தார். மனைவி இறந்த துக்கத்தில் மனம் உடைந்த நிலையில்  காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது அறையில் குருசு அந்தோணி  தூக்குபோட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.  சம்பவம் குறித்த  புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...