×

இளநீர் திருடியதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

குளச்சல்:  கருங்கல்  அருகே தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெபர்லின்(30). இவர்  மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக்கொடையின் 8ம் கொடையையொட்டி ஏவிஎம் சானல்   வடக்கு பக்கம் உள்ள தோப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 4   பேர் தோப்பில் இளநீர் பறித்துள்ளனர். இதை ஜெபர்லின் தட்டிக்கேட்டுள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து  சென்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஜெபர்லின் குளச்சல் அரசு மருத்துவமனையில்  ேசர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்த புகாரின்பேரில்  குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்