×

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஊட்டி, மார்ச் 20: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்திடும் வகையில், அனைத்து வாக்காளர்களையும் விடுபடாமல் வாக்களிக்க செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோத்தகிரி காந்தி மைதானத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமை வகித்தார். இதில் மைதானத்தில் இந்தியா வரைபடம் வரையப்பட்டிருந்தது. அதனை சுற்றி வட்ட வடிவில் வருவாய்த்துறையினர், பொதுமக்கள் நின்று தேர்தலின் தவறாமல் வாக்களிப்பது குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்