ஊட்டி, மார்ச் 20: ஊட்டியில் அரசு ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ ஜியோ ேபாராட்டம் தொடர்பான விளக்க கூட்டம் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆஸ்ரா வரவேற்றார். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்ரமணி விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகைளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசுக்கு கோரிக்கை வைப்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணைச் செயலார் சலீம் நன்றி கூறினார்.