×

கல்லூரி பேராசிரியிடம் நகை பறிப்பு

கூடலூர், மார்ச் 20: பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அடுத்த அய்யன் கொல்லி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நிர்மலா (29); பேராசிரியாரக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சிலர் கதவை தட்டியுள்ளனர். வீட்டில் இருந்த நிர்மலா கதவை திறந்து யார் என்று கேட்ட போது அங்கு இருந்த சில மர்மநபரகள் இவரது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இவர் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வெளியே வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை பணியாளர்களிடம் இது குறித்து தகவல் அளித்துள்ளனர். புகாரையடுத்து, தேவாலா இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பந்தலூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் உத்தரவின்பேரில் ஊட்டியிலிருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்