×

பெண்களுக்கான காவலன் ஆப் குறித்து

விழிப்புணர்வுஓசூர், மார்ச் 20: ஓசூர் ரயில் நிலையத்தில், பெண்களுக்கு காவலன் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஓசூர் ரயில் நிலையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் மற்றும் பயணிகளுக்கும், காவலன் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவலன் ஆப் டவுன்லோடு செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறி, துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்ஐ பாலமுருகன் மற்றும் போலீசார் செய்திருந்தார்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது