×

பொன்னமராவதி பகுதியில் சாலை பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

பொன்னமராவதி. மார்ச் 20: பொன்னமராவதி பகுதியில் தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளானர். மக்களவை தேர்தல் அறிவிப்பு வரும் சமயத்தில் குண்டும் குழியுமான சாலைகள் பெயரளவிற்கு தொடங்கப்பட்டது. பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி,  கல்லம்பட்டி சாலை, ஆலவயல்.கண்டியாநத்தம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சாலையின் இருபுறமும் ஆமை வேகத்தில் மண் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது. எனவே சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Ponnaravaradi ,
× RELATED வாட்டி வதைக்கும்...