×

ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்திற்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் பென்ஷனர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஜெயங்கொண்டம், மார்ச் 20: ெஜயங்கொண்டத்துக்கு ரயில் பாதை கொண்டு வருவேன் என்று உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என்று பென்ஷனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில் உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். ராசமாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி அறிக்கை வாசித்தார்.  கூட்டத்தில் அரசு ஆணை எம்எஸ் 148ன்படி பொங்கல் கருணை தொகையை வழங்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்கள் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது உறுதிமொழியை ஏற்று போட்டியிட வேண்டும். கும்பகோணம்- ஜெயங்கொண்டம்- விருத்தாசலம், சிதம்பரம்- ஜெயங்கொண்டம்- அரியலூர் ரயில் பாதையை கொண்டு ர பாடுபடுவேன்  என்ற உறுதியளிக்கும் வேட்பாளரை வெற்றியடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பொருளாளர் சுந்தரேசன், ராமையன், அருமைநாதன், பாஷ்யம், கோவிந்தராசன், லூர்து, குருசாமி, கோவிந்தராசன், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக துணைத்தலைவர் சோ.ராமசாமி வரவேற்றார். பூ.ராமசாமி நன்றி கூறினார்.

Tags : candidate ,pensioner union meeting ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...