×

அன்னூரில் நடந்து சென்றவர்கள் மீது வேன் மோதி 3 பேர் பரிதாப பலி

அன்னூர், மார்ச் 19:அன்னூரில் தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். கோவை அருகே அன்னூரில் உள்ள திரையரங்கம் முன்பு குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (45), பீகார் சமத்திபூர் பகுதியை சேர்ந்த சத்துருக்கன் மகன் சந்தன் (25), அதே பகுதியை சேர்ந்த தேவ் நாராயண் மகன் தீபக் (16) ஆகியோர் நேற்று இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அன்னூரில் இருந்து தனியார் மில்லுக்கு சொந்தமான வேன், தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அன்னூர் திரையரங்கம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நடந்து சென்ற மூவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
 
இந்த விபத்தில் சம்பத்குமார், சந்தன், தீபக் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் இறந்தனர். போலீசார் சம்பவ இடத்தில் பொருந்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது மில்லுக்கு சொந்தமான வேன், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து, தனியார் மில்லில் இருந்த வேனை பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Annur ,
× RELATED சிறுமுகை-அன்னூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்