×

சேலத்தில் பரிதாபம் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்


சேலம், மார்ச் 19: சேலத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், ஒரு குழந்தை மூளைச்சாவு அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கோமதி (28). இவர்களுக்கு மகாலட்சுமி (3), கவுசிகா  (2) என இரு குழந்தைகள் இருந்தனர். கோமதி கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டது போல நடந்து வந்துள்ளார். இதனையடுத்து, வட்டக்காட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில், சந்திரசேகர் இரு குழந்தைளையும், கோமதியையும் விட்டுச் சென்றார். இதனிடையே நேற்று வீட்டில் இருந்த கோமதி, குழந்தைகளுடன் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், குருணை மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்ததுடன், தானும் குடித்து கோமதி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், குழந்தை கவுசிகா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கவலைக்கிடமாக உள்ள கோமதி மற்றும் மற்றொரு குழந்தை மகாலட்சுமிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இரும்பாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : infants ,
× RELATED இங்கிலாந்தில் 7 பச்சிளங்குழந்தைகளை...