×

சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலில் உண்டியல் வைபவம்

வள்ளியூர், மார்ச் 19:  வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சிறப்பு வழிபாடு நடத்தி சாஸ்தாவை வணங்கி செல்கின்றனர். 6வது நாளான நேற்று  காலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் சுவாமி வீதியுலா, நண்பகல் 12 மணியளவில் தளவாய் சுவாமி சன்னதியில் கற்பூர தரிசனம், உண்டியல் வைபவம், வன்னிய ராசாவுக்கும், தென்கரை ராசாவின் முன்னோடி வீரமணிக்கும் மகாராஜேஸ்வரர் அருள் தரும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேகம், ஆராதனைக்கு பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

Tags : ceremony ,Chittoor ,Maharaja Temple ,Chittor ,
× RELATED சித்தூர் லெனின் நகர் காலனியில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து