×

நாசரேத்தில் வெள்ளை வர்ணம் பூசாத வேகத்தடையால் அடிக்கடி விபத்து

நாசரேத், மார்ச் 19:  நாசரேத்தில் வெள்ளை வர்ணம் பூசாத வேகத்தடையால் தினமும் விபத்து நடந்து வருகிறது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி முன்பு மெயின் ரோட்டில் பெரிய அளவில் வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசாததால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் கடை நடத்தி வரும் பால்ராஜ் கூறியதாவது: இந்த வர்ணம் பூசாத வேகத்தடையால் தினமும் விபத்து நடந்து வருகிறது. ஏராளமான இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் செல்லுகின்றனர். எனவே, பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் முன்பு இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும்’ என்றார்.

Tags : Nazareth ,accidents ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்