துறையூர், மார்ச் 19: உப்பிலியபும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொப்பம்பட்டி, முருங்கப்பட்டிபகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலின் பேரில்உப்பிலியபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொப்பம்பட்டியில் 3 இடங்களில் தனித்தனியாக மது விற்ற தங்கராசு(53), செல்வராஜ் மகன் பிரகாஷ்(38), ராஜேந்திரன் மனைவி ஜெயக்கொடி மற்றும் முருங்கப்பட்டியை சேர்ந்த கோபால்(52) ஆகிய நான்கு பேரிடமிருந்து 50 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிந்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.