பாபநாசம், மார்ச் 19: பாபநாசத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் தலைவர் சுப்பு தங்கராசன் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவர் கந்த சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் துரைசாமி வரவேற்றார். வரவு செலவு கணக்கை வாசித்து பொருளாளர் சண்முகம் ஒப்புதல் பெற்றார். கூட்டத்தில் பாபநாசம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.