×

தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி

புதுக்கோட்டை, மார்ச்19: புதுக்கோட்டை அண்ணாசிலை பகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி
தலைமை தாங்கினார். தாசில்தார் பரணி, தனி தாசிலதார் சோனைகருப்பையா முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார், வருவாய் ஆய்வாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு, கைகோர்த்து நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.. தொடர்ந்து அண்ணாசிலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்து போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags :
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது