×

பெண் மாயம்

ஜெயங்கொண்டம், மார்ச் 19: ஜெயங்கொண்டம் அருகே மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழமலை (39). இவருக்கும் இவரது மனைவி ரதிதேவி (38) என்பவருக்கும் திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 16ம் தேதியும் இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு வெளியே சென்ற ரதிதேவி வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் ரதிதேவி கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் பழமலை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை தேடிவருகிறார்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...