×

போலீஸ்காரர் மீது தாக்குதல்

சிவகாசி, மார்ச் 19: சிவகாசி அருகே, போலீஸ்காரரை தாக்கியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே, சிவானந்தாநகரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே, லட்சுமியாபுரத்தை சேர்ந்த சங்கர் (27), ராஜ்குமார் (27), பிரபு (29) ஆகியோர் குடிபோதையில், அவர்களுக்குள் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவகாசி டவுன் காவல்நிலைய போலீஸ்காரர் ராமச்சந்திரன் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த மூவரும் அவதூறாக பேசி, ராமச்சந்திரனை கீழே தள்ளி, அவரது தலையில் கட்டை மற்றும் கல்லால் அடித்தனர். இது தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்குமார், பிரபுவை கைது செய்தார். சங்கரை தேடி வருகின்றனர்.

Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...