×

பெரியகுளத்திலிருந்து பழைய பேருந்துகள் மட்டுமே இயக்கம் பயணிகள் தான் திண்டாட்டம்

தேவதானப்பட்டி, மார்ச் 19: பெரியகுளத்தில் இருந்து சில்வார்பட்டி, தேவதானப்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் அரசு பேருந்துகள் சேதமடைந்துள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பெரியகுளம் அரசு பணிமனையில் இருந்து ஒரு பேருந்தும் வத்தலக்குண்டு அரசு பணிமனையில் இருந்து இரண்டு பேருந்தும், தேவதானப்பட்டி வழியாக இயக்கப்படுகிறது. பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, கதிரப்பன்பட்டி, டி.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, காட்ரோடு, வழியாக வத்தலக்குண்டு சென்றுவருகிறது. இந்த அரசு பேருந்துகள் முற்றிலும் பழுதடைந்து சேதமடைந்துள்ளது. பேருந்துக்குள் இருக்கைகள், கைபிடிகள் என அனைத்தும் சேதமடைந்து இருக்கிறது. சில நேரங்களில் இருக்கையில் அமரும்போது பயணிகளை காயப்படுத்திவிடுகிறது. இது குறித்து பயணிகள் உரிய அரசு பணிமனைக்கு புகார் அளித்தும் பேருந்துகளை மாற்றாமல் அப்படியே இயக்குவதாக புகார் எழுந்துள்ளது. ஆகையால் அரசு போக்குவரத்து அதிகாரிகள் பெரியகுளத்தில் இருந்து சில்வார்பட்டி, தேவதானப்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது