×

மாணவ, மாணவியரிடம் தவறான பேச்சு ஆசிரியரை கண்டித்து பெற்றோர் முற்றுகை

வருசநாடு, மார்ச் 19: வருசநாடு அருகே உள்ள கிராமத்தில் பள்ளி ஆசிரியரின் நடவடிக்கை சரியில்லாததால் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட வாலிப்பாறை மலைகிராமம் உள்ளது, இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் பணியாற்றி வரும் கணித ஆசிரியர் ராமராஜ்பாண்டியன் என்பவர் பள்ளி மாணவ, மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசுவதாக கூறி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியரைப் பார்த்து கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் ராமராஜ்பாண்டியனை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஊர் முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர் ராமராஜ்பாண்டியன் தற்காலிகமாக பள்ளியைவிட்டு ஓடி விட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : siege ,student ,parent ,speech teacher ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...