திருமங்கலம், மார்ச் 19: வாக்காளர் பட்டியலில் இருந்து உயிரிழந்த வாக்காளர்களை உடனடியாக நீக்கவேண்டும் என தேர்தல்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.திருமங்கலம் தொகுதியில் 310 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களிடம் வாக்காளர் பட்டியல் தரப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலரும், தங்களது பகுதியில் வாக்காளர் யாராவது உயிரிழந்தால் அதனை கண்காணித்து உடனடியாக அந்த வாக்காளரை வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.