×

கோவை எஸ்பியை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 19: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு சங்கத்தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.துணைத்தலைவர் சந்திரசேகரன், துணைச்செயலாளர் ராஜகோபால், வழக்கறிஞர்கள் அசோக், ரமேஷ், முத்துக்குமார், சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், ராஜகோபால், முத்துக்குமார், ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை எஸ்.பி மற்றும் சட்டக்கல்லூரி முதல்வரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



Tags : protesters ,SP ,Coimbatore ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்