×

ஆச்சாள்புரம்-மாதானம் சாலை முறையாக சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம், மார்ச் 19: ஆச்சாள்புரம்- மாதானம் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்திலிருந்து மாதானம் வரை செல்லும் 3 கிலோ மீட்டர் தூர தார்சாலை மேம்படுத்தப்பட்டு 20 நாட்கள் ஆகிறது. ஆனால் சாலை நெடுகிலும் இருபுறங்களிலும் ஒரு அடி ஆழத்திற்கு உள்ள பள்ளத்தை மண்ணால் நிரப்பவில்லை. இதனால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களும், நடந்து செல்பவர்களும் சாலையோரம் செல்லும் போது தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

இரவு நேரங்களில் இரு சக்கர மோட்டார் பைக்கில் செல்வோர்களும், சைக்கிளில் செல்வோர்களும் அடிக்கடி கீழே தடுமாறி விழுகின்றனர். தார் சாலை மட்டுமே போடப்பட்ட நிலையில், சாலையின் இரு புறங்களிலும் செம்மண் கொண்டு பள்ளத்தை நிரப்பினால் விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் எனவே ஆச்சாள்புரத்திலிருந்து மாதானம் செல்லும் 3 கிலோமீட்டர் தூர தார் சாலையின் இரு புறங்களிலும் உள்ள பள்ளத்தை செம்மண் கொண்டு மூடி விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : road ,Achalpuram-Mudam ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...