×

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி ஆலோசனை

திருவள்ளூர், மார்ச் 19: திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு. நாசர்  அறிக்கை: திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் மற்றும் பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (19ம் தேதி) மாலை 4 மணியளவில் திருவள்ளூர் - காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆர்.எம்.கெஸ்ட் ஹாவுஸில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. ஒன்றியச் செயலாளர் ஆர்.ஜெயசீலன் முன்னிலையில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி வரவேற்கிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் இ.பரந்தாமன், பூவை சி.ஜெரால்டு, ஆர்.டி.இ. ஆதிசேஷன்,   கே.திராவிடபக்தன், கே.ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன், மு.இராஜேந்திரன், ம.ராஜி, ஜெ.ஜெய்மதன், ஜி.ஆர்.திருமலை, கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துக்  கொள்கின்றனர். இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள், நீதிமன்ற அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.   இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvallur South District DMK Advocate ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...