×

கரூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

கரூர், மார்ச் 19:  கரூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. மேலும் 10 நாட்களாக 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து மே மாதம் வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால், தற்போதைய நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத நிலையில், கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. கடந்த ஆண்டு குறிப்பிட்ட அளவு கோடை மழை பெய்திருந்தது. எனவே வரும் கோடை காலத்தில் பெய்யும் மழையாவது கரூர் மாவட்டத்தில் அதிகளவு பெய்து, கோடையின் வெப்பத்தை மாற்றுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்