×

2 வீடுகளை உடைத்து 15 சவரன், பணம் கெள்ளை

கூடுவாஞ்சேரி, மார்ச் 19: கூடுவாஞ்சேரியில் 2 இடங்களில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி காத்தவராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுதாகரன் (40). இவரது தம்பிக்கு கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அன்பளிப்பாக 10 சவரன் நகை, ₹80,000 ரொக்கம் ஆகிய சீர்வரிசை வழங்கப்பட்டன. நள்ளிரவில் மர்மநபர்கள், திருமண மண்டபத்தில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிசென்றனர். கூடுவாஞ்ேசரி ஜவகர் அய்யா நகரை சேர்ந்தவர் வருண் (29). கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த 5 சவரன் நகை, 1 கிலோ ெவள்ளி பொருட்கள், ₹5000 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாின்படி கூடுவாஞ்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags : houses ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்