×

படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி

சிதம்பரம், மார்ச் 19: சிதம்பரம் அருகே வடக்கு
முடசலோடை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா மகன் ஜெயமுருகன் (20), மீன்பிடி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாலை அதே ஊரை சேர்ந்த கண்ணுசாமி மகன் சந்திரசேகர் என்பவருடன் வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் பைபர் படகில் சென்று மீன்பிடித்துக்
கொண்டிருந்தார். அப்போது படகின் ஓரத்தில் இருந்த ஜெயமுருகன் தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். நீரில் மூழ்கிய அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னப்பா கிள்ளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...