×

விவசாயியை கத்தியால் வெட்டியவர் கைது

விருத்தாசலம், மார்ச் 19: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகேயுள்ள கோவிலானூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் விஷ்ணுகுமார் (35), விவசாயி. இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் கண்ணுசாமி மகன் சுப்பிரமணியன் (40). விஷ்ணுகுமாருக்கு சொந்தமான மாடுகள் அவ்வப்போது சுப்பிரமணியனின் கொட்டகையில் சென்று அடைந்து வந்தது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் விஷ்ணுகுமாரின் மாடுகள் சுப்பிரமணியன் கொட்டகையில் சென்று அடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஞானமணி ஆகிய 2 பேரும் விஷ்ணுகுமாரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து விஷ்ணுகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், சுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுகுமாரின் தலையில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த விஷ்ணுகுமார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஷ்ணுகுமார் கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியன், அவரது மனைவி ஞானமணி ஆகிய 2 பேர் மீது
மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்தனர்.


Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு