×

சூளகிரி திருட்டு வழக்கு கைதி மருத்துவமனையில் அனுமதி


சேலம், மார்ச் 15:  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார், நேற்று முன்தினம், திருட்டு வழக்கில் பெங்களூரு சிக்கபெல்லாபுரம் பகுதியை சேர்ந்த சையத் ரியாஸ் (32) என்பவரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தியபின், அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க நேற்று அதிகாலை கொண்டு வந்தனர். சிறையில் அவரை பரிசோதித்தபோது, தோள்பட்டையில் கடுமையான வலி இருப்பதாக சையத் ரியாஸ் தெரிவித்துள்ளார். சிறை மருத்துவர்கள் பரிசோதனையிலும், கைதி காயத்தால் அவதியடைவது தெரிவந்தது. இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுப்பி வைத்தனர். அதன்படி அதிகாலையில் கைதி சையத் ரியாசை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  


Tags : hospital ,prisoner ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...