×

பென்னாகரத்தில் மின்கம்பி திருட்டு

தர்மபுரி, மார்ச் 15: பென்னாகரம் அருகே, பி.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது தோட்டத்தில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 450 மீட்டர் மின்கம்பியை, இவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் மின்வாரிய ஊழியர்கள் வைத்து விட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று மீண்டும் வந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த மின்கம்பி மாயமாகி இருந்தது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகத்தின் ஒப்பந்த பணி செய்யும் நிறுவனத்தின் அதிகாரி ராஜா, பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா