×

டாக்டர் வீட்டை உடைத்து 170 சவரன் நகை ₹3 லட்சம் கொள்ளை

பூந்தமல்லி, மார்ச் 15: டாக்டரின் வீட்டை உடைத்து, 170 சவரன் நகை, ₹3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவேற்காடு கோ ஆபரேட்டிவ் சொசைட்டி நகரை சேர்ந்தவர் சந்தானமுத்து. இவரது மகன் சித்தார்த்தன் (30). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர். கடந்த 12ம் தேதி சந்தானமுத்துவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அனைவரும் மருத்துவமனையில் இருந்தனர். நேற்று முன்தினம் காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கரில் இருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 170 சவரன் நகைகள், ₹3 லட்சம் ரொக்கம், வைரம், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : doctor ,house ,robbery ,jewelery ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...