×

தேர்தல்பணி நிலைக் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கை

மயிலம், மார்ச் 15: மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல்பணி நிலைக் கண்காணிப்புக்குழு தீவிர வாகன தணிக்கையில் ஈடுட்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 10ம் தேதி மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தொகுதி வாரியாக தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புகுழு என அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறி பொருட்கள் ஏதேனும் எடுத்து செல்கின்றனரா? என கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று மயிலம் செண்டூர் சாலையில் தேர்தல் பணி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் முருகானந்தம் தலைமையில் போலீஸ் ஏட்டு கள் வெற்றிவேல், சுந்தரமூர்த்தி, கருணாமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இக்குழுவினர் மயிலம் ஒன்றியம், வல்லம் ஒன்றிம் உள்ளிட்ட மயிலம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Election Monitoring Team ,
× RELATED தேர்தல் கண்காணிப்பு குழு எடுக்கும் வீடியோவை கட்டணம் செலுத்தி பெறலாம்