×

பணப்பலன்களை வழங்க கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 15: பணப்பலன்களை வழங்க கோரி புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்கம் (ஏஐடியூசி) சார்பில் புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னரில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டப்படி உடனே பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதியத்திற்கான பஞ்சப்படியை இரண்டரை ஆண்டுகளாக உயர்த்தி கொடுக்க நிதியில்லை எனக்கூறி காலம் தாழ்த்துவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் நாராயணன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் தர்மராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது